இலங்கை

எரிவாயு குறித்து அரசு வழங்கியுள்ள உறுதிமொழி!

நாளை தொடக்கம் எதிர்வரும் காலங்களில் எந்த ஒரு சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நேற்றைய தினம் லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்

சமையல் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் தனது முந்தைய விலையிலேயே விநியோகித்து வரும் நிலையில் லாப் நிறுவனம் புதிய விலையில் விநியோகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button