இலங்கை

ஊரடங்கு நேரத்திலும் இவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

நாட்டில் அதிகரித்து வரும் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கோடு நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 30ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு தங்க நிறத்தில் 19 சேர்பவர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கை ஒன்றினை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் இவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

  • சுகாதார சேவைகள்
  • பொலிஸ் நிலையங்கள்
  • கிராம அலுவலகர்கள்
  • அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள்
  • உள்ளுராட்சி அமைப்புக்கள் ( தேவையான ஆளனியுடன் இயங்க முடியும்)
  • நாளாந்த பயன்பாட்டுக்கான தேவைகள் (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு விநியோகம், எரிவாயு விற்பனை நிலையம், பெற்றோல் நிரப்பு நிலையம், மோட்டார் சைக்கிள் திருத்துமிடம், சாலை, கட்டுமானப் பணி)
  • விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ( மாவட்ட எல்லைகளைத் தாண்டாது)
  • பலசரக்கு கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஒன்லைன் விநியோகத்தில் செயற்படல்
  • அத்தியாவசியப் பொருட்கள் விநியோகஸ்தர்கள்
  • வெதுப்பகங்கள் (நடமாடும் விற்பனை)
  • வங்கிகள் (மட்டுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனை)
  • போக்குவரத்து – அத்தியாவசிய / பிற அனுமதிக்கப்பட்ட, நோயாளிகளின் அவசர தேவை மற்றும்
  • அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
  • இறுதிச் சடங்குகள் – 24 மணிநேரத்தில் மேற்கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் (கொரோனா அற்ற மரணங்களின் போது மாத்திரமே) ஓரே நேரத்தில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற அனுமதிக்கப்படுவர்
  •  65 வயதிற்கு மேற்பட்டோர், நாற்பட்ட நோயாளிகள் மருத்துவ தேவைகளை தவிர்த்து வெளியில் செல்ல முடியாது
  • தனிப்பட்ட கூட்டங்களை நடாத்த முடியாது
  • தினசரி ஊழியம் பெறும் தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்
  •  சுற்றுலா தொடர்பான செயற்பாடுகளுக்கு மேலே இருந்து விலக்கு அளிக்கப்படும்
  •  மாவட்ட, உள்ளூர் கொரோனா ஒழிப்பு குழுக்களால் தீர்மானக்கப்பட்ட முடிவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button