இலங்கை

21ம் திகதி வரை தடுப்பூசியை பெற்று கொள்ளலாம்!

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்கள், குருதி சுத்திகரிப்பு முன்னெடுக்கபடுவோர் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சையினை மேற்கொண்டோர் தமக்கான 1வது தடுப்பூசியை  மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் பெற்று கொள்ள முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று சனிக்கிழமை முதல் 21ம் திகதி வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு சென்று நேரத்தில் தடுப்பூசியினை ஏற்றிகொள்ள  முடியும்.

கொரோனா தடுப்பூசி குறித்து 1906 எனும் துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் 011 2 860 002 எனும் இலக்கத்தின் ஊடாகவும் , கொரோனா  ஒழிப்பிற்கான தேசிய செயலணியுடன் தொடர்பினை மேற்கொண்டு சேவைகளை பெற்றுகொள்ள முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button