இந்தியா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இரு நாளுக்கு அனுமதி இல்லை!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படாது என பொது தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகஅரசு கொரோனா பரவல் தொடர்பில் அதிகமான விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது.

இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முக்கிய கோவில்களில் ஆடிமாத திருவிழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும், நாளையும் இரு நாட்களிற்கு பக்தர்கள் சுவாமியினை தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் நடராஜர் கோவில் வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button