இலங்கை

பாலியல் தேவைக்கு சிறுமியை விற்பனை செய்த இணையத்தளத்திற்கு நீதிமன்று கொடுத்த உத்தரவு!

கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியை, இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நான்கு  இணையத்தளங்களையும் முடக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தினால் தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button