இலங்கையாழ்ப்பாணம்

குடும்ப பகையால் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு; காதலன் உயிர்மாய்ப்பு; காதலி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!

நீண்டகால குடும்பப் பகை காரணமாக காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தமையால், காதலர்கள் தவறான முடிவெடுத்து உயிரைமாய்க்க முனைந்த நிலையில் காதலன் உயிரிழந்துள்ளார்.

காதலி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உறவு முறையான 19 வயது இளைஞரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

இரு வீட்டாருக்கும் இடை யில் நீண்ட காலமாகக் குடும்பப் பகை நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், தமது பிள்ளைகள் காதலிப்பதை அறிந்த பெற்றோர் காதலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் 19 வயதான குறித்த காதலன் மருந்து போத்தல் ஒன்றை வாங்கி அரைவாசியை தான் குடித்துவிட்டு மிகுதியை தனது 17 வயது காதலிக்கு  குடிக்க கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இருவரையும் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தவேளை, அங்கு காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காதலி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button