இலங்கையாழ்ப்பாணம்

யாழில் இளம் கர்ப்பிணி பெண் கொரோனாவால் பலி!

யாழ்ப்பாணத்தில் 30வயதுடைய இளம் கர்ப்பிணிபெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்தவரே நேற்று முந்தினம் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கர்ப்பிணிபெண் திருமணம் முடித்து ஒரு வருடமே ஆகிறது. இந்நிலையில் திடீரென வாந்தியெடுத்ததை அடுத்து மயக்கமடைந்துள்ளார். இதை அடுத்து உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வெளிநோயாளர் பிரிவிலேயே மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து அவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து பிசிஆர் பரிசோதனை நடாத்தப்பட்டது.

இதன்போது உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா  தொற்றுள்ளமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button