இலங்கை

பால்மா தட்டுப்பாடு குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது!

இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவிற்கு விதிக்கப்படுகின்ற வரியை குறைப்பது குறித்து அவதானம் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் தேடியறியுமாறு அமைச்சரவை நிதி அமைச்சுக்கு அறிவித்தல் கொடுத்துள்ளது.

இதன்போது உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுத்தா விதத்தில் வரி குறைக்கப்பட வேண்டுமென அமைச்சரவை அறிவுறுத்தல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பால்மா நிறுவனங்கள் பால்மா இறக்குமதியினை மட்டுப்படுத்தியதால் சந்தையில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கருத்திற் கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button