இலங்கையாழ்ப்பாணம்

யாழ் பண்ணை பாலத்திற்குள் தவறி வீழ்ந்தவரை காணவில்லை!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியிலுள்ள பண்ணை பாலத்திற்குள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை 5.30மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நீண்ட நேரமாக இடம்பெற்ற கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணியின் போதும் இவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

சம்பவத்தில் கடலில் வீழ்ந்தவர் நல்லூரை சேர்ந்த கௌதமன் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பண்ணை பாலத்தில் இருந்து செல்பி எடுக்க முற்பட்ட போதே தவறி வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button