இலங்கை

சடலங்களை பாண் வெதுப்பகங்களில் எரிக்க வேண்டி வரும்!

கொரோனா தொற்றால் மரணங்கள் ஏற்படும் வீதம் அதிகரித்துள்ள நிலையில், சடலங்களை எரிப்பதற்கு போதுமான அளவில் சுடுகாடுகள் இல்லாத காரணத்தினால், பாண் வெதுப்பகங்களில் சடலங்களை தகனம்செய்ய நேரிடுமென முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊடககண்காட்சியை நிறுத்திவிட்டு, தொற்றுநோயை தடுக்க உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தேரர் இதன்போது வலியுறுத்தினார்.

அவசியமான நேரத்தில் நாட்டினை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆபத்து அதிகரித்து வந்தபோது, கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கு பதிலாக கட்டுப்பாடுகளை தளர்த்தியுளனர்.

அத்தோடு தினமும் ஏற்படும் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விசேட மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது முன்னெடுக்கபடும் அபிவிருத்தி திட்டங்களை கூட இடை நிறுத்திவிட்டு, தொற்றுநோயை கட்டுப்படுத்த முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்ததேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button