இந்தியாவிடுப்பு

சிறுமிக்கு இரு முறை திருமணம் – பெற்றோர் உட்பட 6பேர் கைது!

18வயதை பூர்த்தி செய்யாத சிறுமிக்கு இருதடவை திருமணம் நடத்தியதாக, சிறுமியின் பெற்றோர் உட்பட ஆறு பேரை பொலிஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

திங்கள்கிழமை காலை பவானி காவல் நிலையத்திற்கு வந்த ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சேலம் மாவட்ட சங்ககிரி விநாயகா் கோயிலில் காதல் திருமணம் செய்ததாகவும், தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டனா்.

இது குறித்து போலீசார் விசாரணை செய்த போது,

சேலம் மாவட்டம், தேவூா், காவேரிபட்டியை சோ்ந்த வடிவேல் மகன் அஜித் (வயது21) என்பதும், 18வயதை பூர்த்தியாகத சிறுமி என்பதும் தெரியவந்தது.

சிறுமியின் பெற்றோர், கோவில்பாளையத்தை சோ்ந்த அப்புசாமி (48), நாகமணி (34) ஆகியோரை அழைத்து போலீசார் விசாரனை செய்தனா்.

இதன்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம், மேட்டூா், காவேரிபுரம் புதுப்பட்டியைச் சோ்ந்த 34வயதுடைய காமராஜ்க்கு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து வைத்தமை தெரியவந்தது.

புதுப்பட்டியில் குடும்பம் நடத்தி வந்த இப்பெண்ணும், காமராஜும் ஆடி பண்டிகைக்காக சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனா். இந்நிலையில், பெற்றோர் வீட்டுக்கு சிறுமி வந்தபோது, அஜித் அழைத்துசென்று திருமணம் செய்தமை தெரிய வந்தது.

இது தொடர்பில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சிறுமியை திருமணம் செய்த காமராஜ், அஜித், கட்டாயத் திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழே போலீசார் கைது செய்தனா்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button