இலங்கை

வீடு புகுந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றவர் கைது!

கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 19வயது ஆசிரியை ஒருவரின் வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டநபர் கிருலப்பனையில் உள்ள சித்தரத்த மாவத்தையில் வசித்து வருகிறார். ஆசிரியையும் அதேவீதியில் வசிப்பவராவார்.

ஆசிரியை தனதுதாய் மற்றும் சகோதரருடன் வாடகைவீட்டில் வசித்து வருகிறார். அவர்ஒரு தனியார்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கைதுசெய்யப்பட்ட நபர் ஆசிரியையின் வீட்டுனுள் புகுந்து ஆசிரியை தொட்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதன்போது ஆசிரியை சந்தேக நபரை நோக்கி தாக்க அவர் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

அதன்பின் ஆசிரியையின் வீட்டில் சந்தேக நபரின் தொலைபேசியை பொலிசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில் குறித்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், குறித்த பெண் களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button