இலங்கை

எனது சாவுக்கு காரணம், ஹிசாலினியின் இறுதி கடிதம்?

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிபெண்ணாக வேலைசெய்த ஹிசாலினியின் மரணம் குறித்த முக்கிய சாட்சியம் ஒன்று கிடைத்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில்
பொரளை பகுதியில் உள்ள ரிஷாத்தின் வீடு மீள்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் ‘என் சாவுக்கு காரணம்’ எனும் வார்த்தை பேனையினால் எழுதப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்துக்கள் இரசாயனபகுபாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கபட்டு வரப்படுகிறது.

இதனை ஹிசாலினியின் மரணத்திற்கு முன்  எழுதப்பட்டதா அல்லது விசாரணையினை திசைதிருப்பும் நோக்கில் வேறுயாராலும் எழுதப்பட்டதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button