இலங்கை

காணமல் போன பெண் 200அடி பள்ளத்தில் சடலமாக மீட்பு!

திம்புளை பத்தனை பகுதியில் காணமல் போன பெண், டெவோன் நீர்வீழ்ச்சியினது அடிப்பகுதியில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் மூன்று பிள்ளைகளது தாயான மலர்விழி (வயது 53) என தெரிய வந்துள்ளது.

ஜூலை 26ஆம் திகதி காணாமல்போன குறித்த பெண்ணை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார் நீர்வீழ்ச்சியின் பகுதியில் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்போது குடை, பாதணிகள் மற்றும் கைப்பை ஆகியவை மீட்கப்பட்டது..

இந்நிலையில் நீர்வீழ்ச்சியில் சுமார் 200அடி பள்ளத்தில் நீரில் மிதந்த பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.

அத்தோடு குறித்த நீர்வீழ்ச்சியை பார்க்க வந்த 4 சிறுமிகளில் ஒருவர் கால் இடறி விழுந்து காணாமல் போயிருந்தார். குறித்த சிறுமியை படையினர் தேடிய போதிலும் சிறுமி இதுவரை மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button