இலங்கை

ரிஷாத்தின் மச்சானால் மற்றுமொரு பெண் துஷ்பிரயோகம்!

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றும் போது ரிஷாத் பதியுதினின் மனைவியின் சகோதரர் தன்னை துஷ்பிரயோகந்திற்கு உட்படுத்தியதாக 29வயதுடைய பெண் ஒருவர் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்தபோது எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி குறித்து விசாரணைகளை நடாத்தி வரும் விசேட பொலிஸ் குழுவிடம், பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து பொலிஸ் குழு ஒன்று ரிஷாத்தின் வீட்டிற்கு இன்றைய தினம் சென்று வாக்குமூலத்தினை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஹிசாலினியின் மரணம் குறித்து ரிஷாத்தின் மனைவி, மைத்துனர், மாமனார், சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button