இலங்கைகொழும்பு

இரு டோஸ்களையும் போட்ட வைத்தியருக்கு தொற்று உறுதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரு தடுப்பூசிகளையும் ஏற்றிய வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட்தொற்று மீளவும் மிக வேகமாக பரவும் நிலைமையினை கருத்தில் கொள்வதற்காக இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென விசேட வைத்திய நிபுனர் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலை கட்டமைப்பினால் தாங்க முடியாத அளவிற்கு கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சில வார்டுகள் மிக நெரிசலாக இருப்பதோடு, கொரோனா தொற்றாளர்கள் ஒருபுறமும் மறுபுறத்தே தொற்று இல்லாத நோயாளகள் தனிமை படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களும் ஏனைய நோயாளிகளும், ஒரே கழிப்பறையினையும் உணவு உண்ணும் இடத்தினையும் பயன்படுத்தும் சூழல் இருப்பதால் நோயாளது எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button