இலங்கையாழ்ப்பாணம்

இரு டோஸ்களையும் போட்ட தாதிய மாணவர்களுக்கு தொற்று!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லுாரியில், கல்வி கற்று வரும் 25இற்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து மாணவர்களும் ஒக்ஸ்போர்ட் தயாரிப்பான கொவிசீல்ட் தடுப்பூசியின் இரு டோஸ்சினையும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மாணவர்களோடு விடுதியில் தங்கியிருந்த 64 மாணவர்கள் தாதியர் பயிற்சி கல்லூரி விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தாதிய பயிற்சி மாணவர்கள் 25 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்ட நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரது தீர்மானத்திற்கு அமைய அவர்களை விடுதிகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தனிமைப்படுத்தப்பட்ட தாதிய மாணவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதோடு, இவர்கள் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்கள் என தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button