இலங்கை

கொழும்பில் வேலை செய்யும் பல சிறார்கள்! எதிர்வரும் நாட்களில் விசேட சோதனை!

கொழும்பிலுள்ள அதிகளவான பணக்காரர்கள் தமது வீடுகளில் வேலைசெய்வதற்காக சிறுவர்களை ஈடுபடுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் அவ்வாறான வீடுகளை விசேட சோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீடுகளில் சிறுவர்கள் பணி புரிந்தால் வீட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் ரிஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி குறித்த விசாரணை நடவடிக்கைகள் பெரிதாக திருப்தியடைய முடியவில்லை.

எனவே இது குறித்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்,.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button