இலங்கை

புலிகளின் ஆயுதத்தை தேடி பொலிசார் வேட்டை!

திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேசத்திற்கு உட்பட்ட தேவ நகர்ப் பகுதியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி பொலிசார் அகழ்வு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் தனியார் காணியொன்றில் கைக்குண்டொன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த இடத்தில் புலிகள் ஆயுதங்களை புதைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரிலே அகழ்வுப்பணியில் நடைபெறுகிறது.

திருகோணமலை நீதிமன்றத்தின் ஊடாக அனுமதி பெற்ற பின்னரே இன்று (24) அகழ்வுபணியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டு உரிமையாளரது சகோதரரொருவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தமை விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button