இலங்கைகிளிநொச்சியாழ்ப்பாணம்

3.7 கோடி பெறுமதியான கஞ்சாவுடன் யாழில் மூவர் கைது!

யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பில் 3.7கோடி பெறுமதியான 103 கிலோ கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கஞ்சாவினை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் கேரள கஞ்சாவினை கடத்துவதற்கு முற்பட்ட போது வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் நடாத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போதே குறித்தபடகு கைப்பற்றபட்டது.

இதில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை பகுதியில் வசிப்பவர்கள் என கடற்படை தெரிவிக்கிறது.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, படகு என்பவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button