இலங்கை

15வயது சிறுமி விவகாரம்! முக்கிய புள்ளி பிணையில் விடுதலை!

இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம் தொடர்பில் 40இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் கொடுத்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுருந்த மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலி நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

மாலைதீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 15வயது சிறுமி அவரை அடையாளம் காட்டியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் சார்பில் சட்டத்தரணி முன்வைத்த பிணை கேரிக்கையை ஏற்று நீதிமன்று அவருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை அளித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button