இலங்கை

15 வயது சிறுமி விவகாரம்! பிரபல பெளத்த பிக்கு ஒருவருக்கும் தொடர்பு!

இணையத்தில் மூலம் 15வயது சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதோடு குறித்த சிறுமியை அதிகளவு பணம் கொடுத்து துஷ்பிரயோகம் செய்த பிக்கு தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகளவில் பணத்தை கொடுத்து கல்கிஸ்சை பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்தமை தெரிய வந்துள்ளது.

இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்டு துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் இந்த சிறுமிக்காக பெருந்தொகை பணத்தை செலுத்தியமையும் தெரியவந்துள்ளது.

இவர்களில் மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உட்பட விசேட மருத்துவ நிபுணர், பிரதேச சபை தலைவர், சில பொலிஸ் அதிகாரிகள், பாடகர், வர்த்தகர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வலைவீசி கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button