இலங்கை

மைத்திரியுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான  அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த இச்சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு நிறைவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்சபை கூடியதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தமது பதவியிலிருந்து விரைவில் மாறவுள்ள நிலையில் இச்சந்திப்பு இடபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button