இலங்கை

கொரோனா நோயாளி தற்கொலைக்கு முயற்சி!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்ம்பெற்றுள்ளது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள  கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திலேயே குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் வசித்து வரும் 63 வயதுடைய முதியவர் ஒருவர் தொற்று காரணமாக சில நாட்களுக்கு முன் வவுனியா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை (01) மாலை தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டார்.

இப்பொழுது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button