இலங்கை

துமிந்த விடுதலைக்கு ஐ.நாவும் கடும் எதிர்ப்பு!

மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்தமைக்கு  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் எதேச்சாதிகாரமாக மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளின் மற்றுமோரு எடுத்துக் காட்டாக துமிந்த சில்வாவின் விடுதலை அமைந்துள்ளது.

இவ்வாறு  மனித உரிமை பேரவை ஆணையாளர் மிச்செல் பச்செலட் தெரிவித்தார்.

எதேச்சாதிகாரமாக வழங்கப்படுகின்ற பொது மன்னிப்புக்களானது சட்டம் ஒழுங்கை மலினப்படுத்துவதோடு குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுவதையும் பலவீனப்படுத்துமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரணதண்டனை கைதியான துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்புக்களும் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button