இலங்கை

12 வருடத்தின் பின் குடும்பத்துடன் இணைந்த தமிழ் அரசியல் கைதி!

பயங்கரவாத தடுப்பு தடை சட்டத்தின் கீழ் 12 வருடங்களுக்குன் முன்னர் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சூரியகாந்தி ஜெயச்சந்திரன் என்பவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார்.

இவரை பயங்கவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009ம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி கைது யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைத்து வைத்தனர்.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் இவரும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் இதில் 16 பேர் தமிழ் அரசியல் கைதிகளும் உள்ளடங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button