இலங்கை

யோகா செய்த பிரதமர் மஹிந்தவும் அவரது மனைவியும்!

7வது சர்வதேச யோகாதினம் இன்று திங்கட்கிழமை உலகம் முழுதும்  அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும்  அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவும் யோகா பயிற்சியில் ஈடுபட்ட  புகைப்படமானது வைரலாகி வருகிறது.

குறித்த புகைப்படத்தை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், தங்களின் யோகா அமர்வுகளின் புத்துணர்ச்சிதரும் இத்தொகுப்புக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் பெருமதிப்புக்குரிய ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக்கியவிதம் யோகா ஆர்வலர்களுக்கு உற்சாகமளிக்கும்.உங்கள் இருவருக்கும் எம் மரியாதை என தெரிவித்துள்ளது.

இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்த்தனவிடம் மஹிந்த ராஜபக்ச 2015ம் ஆண்டில்  யோகா பயிற்சி பெறும் புகைப்படத்தினை நாமல் ராஜபக்ச தனது முகநூலில் பதிவேற்றி இருந்தார்.

இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தின் பிரதான நிகழ்வுகள் காலை 06.30 மணியளவில் இலங்கை பாதுகாப்பு படையினருடன் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button