இலங்கைகிளிநொச்சி

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

கிளிநொச்சி, பழைய ஊரியான் பிரதேசத்தில் நேற்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த தெரியவருவதாவது,

பழைய ஊரியான், கோர கண்கட்டு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக  சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெற்று வந்ததை அடுத்து பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மணல் அகழ்வுகள் ஓரளவு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் நேற்று கோரக்கன் கட்டு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button