இலங்கை

முல்லைத்தீவில் கிபிர் விமான குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் 5ஆம் வட்டார பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 5 இஞ்ச் எறிகணை ஒன்றும் கிபிர் விமானக்குண்டு ஒன்றும் இருந்தமை இனம்காணப்பட்டுள்ளது.

விவசாயம் செய்வதற்காக குறித்த காணியை உரிமையாளர் துப்பரவு செய்த போதே 5 இஞ்ச் எறிகணை ஒன்றும் கிபிர் விமானக்குண்டு ஒன்றும் இருந்தமை அடையாளம் காணப்பட்டன.

மேலும் வெடிபொருட்கள் அக் காணியில் புதைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதஇஅ அடுத்து வெடிபொருட்களை அங்கிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button