இலங்கையாழ்ப்பாணம்

யாழில் நடைபெற்ற திருமணத்தில் 24பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 78 பேரில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏனைய 54 பேரையும் நேற்றில் இருந்து மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

15 பேர் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்ட திருமண நிகழ்வில் 100 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸாரும், சுகாதார பிரிவினரும் திருமணம் நடந்த வீட்டை சுற்றி வளைத்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நடாத்தப்பட்ட PCR  பரிசோதனையில் 24 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை அடுத்து ஏனைய 54பேரையும் தனிமைப்படுத்தல் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button