இலங்கை

கூட்டமைப்பு இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டு உள்ளது.

அத்துடன் 13வது திருத்தத்துக்கு அமைவாக ஐக்கிய இலங்கை எனும்  கட்டமைப்புக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button