இலங்கை

5,000ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லையா? மேன்முறையீடு செய்யுங்கள்!

நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர் பயணத்தடை காரணமாக அரசினால் வழங்கப்பட்ட 5ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்த, வருமானம் குறைந்த குடும்பங்களிற்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மேன்முறையீடு செய்ய முடியுமென, அம்பாறை மாவட்ட  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

கிராம சேவகர்களையும், சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் தொடர்பு கொண்டு, பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என உறுதிபடுத்திய பின் மேன்முறையீடு செய்ய முடியு மென அவர் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு படிவத்தை பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களிற்கு ஒப்படைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button