இலங்கையாழ்ப்பாணம்

வவுனியா வளாகத்தினருக்கு வெள்ளி கொரோனாத் தடுப்பூசி

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாளை வவு னியா மாவட்ட வைத்தியசாலை யில் வைத்து தடுப்பூசிகள் ஏற் றப்படவுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 100 பேருக்குக் கொரோனாத் தடுப் பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவை வழங்கினர்.

இதன் அடிப் படையில் யாழ். பல்கலைக்கழ கத்தில் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

அ டு த் த க ட் ட மா க யாழ்.பல்கலைக் கழக வவு னியா வளாகத்தைச் சேர்ந்த வர்களுக்கு நாளை வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து தடுப்பூசிகள் வழங்கு வதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள பல்கலைக்க ழகங்களின் கல்விச் செயற்பாடு களை வழமைக்குக் கொண்டு வரும் வகையில் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் சக லருக்கும் கொரோனாத் தடுப் பூசிகளை வழங்குவதற்கு பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகா தார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத் திருந்தமை குறிப்பிடத் தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button