இலங்கையாழ்ப்பாணம்

யாழில் 4கோடி பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தொண்டமானாறு கடற்கரை பகுதியில் வைத்து அண்ணளவாக 4கோடி பெறுமதியான கேரள கஞ்சாவினை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து பணியின் போது, 4 பொதிகளில் அடைக்கப்பட்டுருந்த 131 கிலோ 800 கிராம் நிறையுடைய  கஞ்சா மீட்கப்பட்டது.

இதன் பெறுமதி சுமார் 39.54 மில்லியன் ரூபாய் என கூறப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப மீட்கப்பட்ட கஞ்சாவை தீயிட்டு அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button