இலங்கை

ஏ9 வீதியில் சொகுசு காருக்குள் சிக்கிய இரு ஜோடிகள்!

ஏ9 வீதியால் பயணித்த சொகுசுகார் ஒன்றினை பொலிசார் சோதனைக்கு உட்படுத்திய போது இருஜோடிகள் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரில் ஹெரோயின் போதைபொருள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே அதில்பயணித்த இருஇளம் குடும்பங்களை கைது செய்ய்யப்பட்டதாக  ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற சொகுசு கார் மீது பொலிசார் திடீர் சோதனை நடாத்தினார். இதன் போது குறித்த காரில் 63.84 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைபொருள் மீட்கப்பட்டது.

இதை அடுத்து ஹெரோயின் போதைபொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை கொண்டுசென்றமைக்காக அதில் பயணித்த இரு இளம் தம்பதிகளை பொலிசார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மதவுவைத்தகுளம் மற்றும் சாவகச்சேரி பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுடன் 4 மற்றும் 8 மாதகுழந்தைகளும் காரில் பயணித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button