உலகம்

லண்டனில் 16 வயது சிறுவன் குத்தி கொலை!

லண்டனில் 16 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்வினை ஏற்படுத்தி உள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இவ்வாண்டு கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இக்கத்தி குத்து சம்பவத்தால் பலியாகி வருகின்றனர்.

நேற்றிரவு மேற்கு லண்டனின் Southall பகுதியில், அடையாளம் தெரியாத இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தான்.

இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பில் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 16 வயதுடைய Ashmeet Singh என தெரியவந்துள்ளது.

அச்சிறுவனின் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இப்பொழுது வரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு இது போன்ற சம்பவங்களால்  28 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button