இலங்கைகொழும்பு

அடுத்த தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிடும்!

வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் பரவாயில்லை. அடுத்துவரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சியின் அநுராதபுர மாவட்டகுழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றபட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினது அநுராதபுரம் மாவட்டத்திற்கான குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் நேற்றையதினம்  இடம்பெற்றது.

இதன் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசினால் தமது கட்சிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டு புறக்கணிப்புகள் நடைபெறுகிறது. ஆகவே, முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button