இலங்கை

வாகன இறக்குமதிக்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையானது அடுத்துவரும் ஆறு தொடக்கம் ஏழு மாதங்கள் வரை நீடிக்க எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இப்பொழுது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசிடம் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக கடந்த ஆண்டு 2020 மார்ச் தொடக்கம் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button