உலகம்

கனேடிய தமிழருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு லொட்டரி டிக்கெட் மூலம் ஒரு இலட்சம்  (இலங்கை மதிப்பில் 1,62,51,236 ரூபாய்) கனெடிய டொலர்கள் வென்று பணக்காரராக மாறி உள்ளார்.

கனடாவின் மிசிசாகா பகுதியை சேர்ந்த கோபாலநாதன் சதாசிவம்(56). தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் வால்மார்ட் பகுதியில் உள்ள சீஎன்ஐபி கியோஸ்க்கில் 1 கனெடிய டாலருக்கு லொட்டரி டிக்கெட்டை வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு சுமார் $100,000 கனடிய டாலர்கள் பரிசு தொகை விழுந்துள்ளது.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று கூறினார்.

அத்தோடு லொட்டரி மூலம் தமக்கு கிடைத்த பணத்தின் மூலம் சில பில்களை கட்டுவதோடு மீதம் உள்ள பணத்தை குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்ய உள்ளதாகவும் பாதுகாப்பான சூழல் நிலவும் பொழுது குடும்பத்துடன் விடுமுறைக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் புன்னகையோடு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button