இலங்கை

நாடு முழுதும் மின்சார தடை? அரசு வெளியிட்ட தகவல்!

நாட்டில் மின்சாரதடை ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கள் சில போராட்டத்தை நடாத்த உத்தேசித்துள்ள நிலையில் மின்சாரதடை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார விநியோக நடவடிக்கைகள் வழமை போல நடைபெறும் எனவும் பல தொழிற்சங்கங்கள் உறுதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மாத்திரமே போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் மின்சாரம் தடைப்பட்டால் அதனை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சாரத் தடை ஏற்படும் பட்சத்தில் அதனை சீர் செய்ய இராணுவத்தினரை ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக கூறப்படும் கருத்தில் எவ்வித உண்மை தன்மையும் இல்லை எனவும், அதற்கான அவசியம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button