இலங்கைமட்டக்களப்பு

படித்து கொண்டிருந்த 13வயது சிறுமி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு அரசடி பொற்கொல்லர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் படித்து கொண்டிருந்த 13வயது சிறுமியி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி கற்று வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில் சகோதரிகள் இருவருடன் சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.

Zoom ஊடாக படித்து கொண்டிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையில் இருந்துள்ளார்.

குளியலறையில் இருந்து வந்தபோது Zoom கற்றல் நடவடிக்கையில் இருந்த தங்கை உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணம் குறித்து பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button