இலங்கை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி!

மதுரங்குளி கந்தத்தொடுவா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயார் நேற்று (28) புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

முந்தல் பிரதேச செயலகாத்திற்குற்பட்ட மதுரங்குளி கந்தத்தொடுவா கிராமத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட உறவினர் ஒருவரை, தனது கணவருடன் பார்வையிடச் சென்ற போதே குறித்த பெண் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னை மரத்தில் குளவிக் கூடு கட்டப்பட்டு இருந்ததுடன், புத்தளத்தில் வீசிய கடும் காற்று காரணமாக குறித்த குளவிக் கூடு உடைந்தமையினால், அதிலிருந்த அனைத்து குளவிகளும் கலைந்து 3 பேரை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (28) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button