இலங்கை

சில கட்டுப்பாட்டோடு திருமண வைபவங்கள் நடாத்த அனுமதி!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் ஒக்டோபர் 1ம் திகதி நீக்கப்படவுள்ளது. இந்நிலையில் அதன் பின்பு இரவு வேளைகளில் ஊரடங்கு சட்டத்தினை அமுல் படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

1ம்திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிக்காட்டல்களை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான மக்களுடன் வீடுகளில் மாத்திரம் நடாத்த அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரண வீடுகளுக்கும், மக்கள் ஒன்று கூடும் பொது நிகழ்வுகள் பலவற்றிற்கும் சுகாதார வழிக்காட்டல்கள் ஊடாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கட்டுப்பாடுகளின் கீழ் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல நேற்று கூறியிருந்தார். எப்படியிருப்பினும் இது தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி தீர்மானம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திறக்கப்படும் போதிலும் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய மக்கள் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button