இலங்கையாழ்ப்பாணம்

குழந்தை பிரசவித்த தாய் கொரோனாவால் பலி! யாழில் சோகம்!

குழந்தை பிரசவித்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

அளவெட்டி வடக்கில் வசித்து வரும் 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி எனும் தாயாரே யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

செப்டெம்பர் 8ம் திகதி கர்ப்பிணி பெண் உடல் நலக்குறைவினால்  யாழ்  போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா சிகிச்சை விடுதியில் மருத்துவ கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு அன்றைய தினமே பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

தாயாருக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று (15) அவர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button