இலங்கைமன்னார்

ஒரே இரவில் அந்தோணியாராக மாறிய பிள்ளையார்! மன்னாரில் அதிசயம்!!!

மடு தேவாலயத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று ஒரே இரவில் அந்தோணியார் சிலையாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மடு பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அந்தப்பகுதி காட்டுப்பகுதி என்பதால் அந்த பகுதியில் செல்பவர்கள் மதங்களைக் கடந்து பிள்ளையார் சிலையினை வணங்கி விட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பிள்ளையாருக்கு சிறிய கோயில் ஒன்றினை அமைக்கும் பொருட்டு முதல் கட்டமாக மூலஸ்தானம் ஒன்று அமைக்கப்பட்டது.

அதற்குள் தற்காலிகமாக பிள்ளையார் சிலை ஒன்றும் வைக்கப்பட்டது .

இந்நிலையில் அப்பகுதியில் இருந்த பிள்ளையார் சிலையை விஷமிகள் சிலர் தூக்கிவிட்டு அந்தோணியார் சிலையினை வைத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button