இலங்கையாழ்ப்பாணம்

யாழில் தாய் பேசியதால் 11 வயது சிறுமி தற்கொலை!

தனது தாய் பேசியதால் நஞ்சு உண்டு தற்கொலைக்கு முயற்சித்த  எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

11 வயதுசிறுமி ஒருவர் எழுதுமட்டுவாழ் கரம்பகம் பகுதியில் தாயாருடன் தனித்து வசித்து வந்துள்ளார்.

இவர் தற்கொலைக்கு முயற்சித்த சந்தேகத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன் போது பொலிஸார் நடாத்திய விசாரணையின் போது தன்னுடைய தாயார் தன்னை தண்டித்தமையினாலேயே நஞ்சினை உட்கொண்டதாக கூறி இருக்கின்றார்.

குறித்த சிறுமி நேற்று காலை உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button