இலங்கைவிடுப்பு

விபச்சார சேவை பெற வந்த ஆண் மற்றும் 4 பெண்கள் கைது!

இணையத்தின் ஊடாக விளம்பரம் செய்து மசாஜ் நிலையம் எனும் பெயரில் செயற்பட்டு வந்த விபச்சார நிலையம் ஒன்று கொட்டாவ பகுதியில் ஒன்று வளைக்கப்பட்டது. இதன்போது ஐவர் கைது செய்யப்பட்டனர்.

கொட்டாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரு மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இதனுடன் தொடர்புபட்ட 4 பெண்கள் மற்றும் அங்கு சேவையை பெற்றுகொள்ள வந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த விடுதியின் முகாமையாளர் எனக்கூறப்படும் பெண், கட்டிடத்தின் பின் உள்ள பாலடைந்த பகுதியில் பதுங்கி தப்பிக்க முயன்றார்.

இதன்போது அந்த பகுதியில் இருந்த எலிகள் அவரை கடித்தமையால் சத்தமிட்டு வெளியே ஓடி வந்தார். இதன் போது பொலிஸாரிடம் வலமாக சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது கைது செய்யப்பட்ட பெண்கள் 30 தொடக்கம் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் மத்துகம, பலாங்கொடை, பாதுக்கை, பெலிவுல்ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சாரம் இடம்பெற்றுவருகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் விபச்சார நிலையங்கள் குறித்து கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸாரால் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்றுதான் வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button