இலங்கை

ஐ.நா கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளும் ஜனாதிபதி!

எதிர்வரும் 14ம் திகதி நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. பொதுசபையின் கூட்டத்தில் நேரடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்காக அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது அமர்வு நியூயோர்க்கில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் நாட்டின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளும் உயர்மட்ட அமர்வு எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button