இலங்கைவிடுப்பு

பாலியல் தொழில் செய்துவந்த ஏழு பெண்கள் கைது!

கொழும்பு – தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட போது பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஏழு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிலர் வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் சிலர் வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீல் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக விசேட புலனாய்வு தகவல் ஒன்று எமக்கு கிடைத்தது.

இதனை அடுத்து குறித்த பகுதியில் உள்ள வீட்டினை பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பெயரில் 7 பெண்களும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் 23 மற்றும் 29 வயதுடைய பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்,

ஏனைய 5 பெண்களும் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடை தொழிற்சாலையில் வேலை என விபச்சாரம் செய்துவந்த நான்கு பெண்கள்!

ஆபாச படம் பார்த்து 13வயது சிறுமி அதிர்ச்சி! அனுப்பிய 37வயதுடைய நபர் கைது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button