இலங்கை

மஹிந்தாவின் ஊரில் பைசர் தடுப்பூசி! விளக்குகிறார் நாமல்!

இன, மத, மொழியினை அடிப்படையாக வைத்து கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவில்லையென விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்படுவது தொடர்பில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் நாமல் அதற்கு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிற்கு நாமல் கூறுகையில்,

தடுப்பூசி ஏற்றப்படும் மாவட்டம், தடுப்பூசிகளின் எண்ணிக்கை, எந்த வகை தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார அமைச்சே தீர்மானத்தினை எடுக்கிறது.
கடந்த காலங்களில் மன்னார், கண்டி ஆகிய இடங்களிலும் இந்த குற்றம் சுமத்தப்படும் தடுப்பூசிகளே வழங்கப்பட்டன.

கடந்த காலங்களில் பைசர் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் பேசப்படவில்லை. மாவட்டத்தினை பார்த்து தடுப்பூசி ஏற்றப்படவில்லை, சுகாதார அமைச்சினது வழிகாட்டல்களுக்கு அமைய தடுப்பூசி ஏற்றபடுகிறது என மஹிந்த ராஜபக்சவின் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button